Sunday, June 20, 2010

பாவூர்சத்திரம் அருகே மகனை அழைத்து கொண்டு கள்ளக்காதலியுடன் கணவன் ஓட்டம் : மீட்க கோரி மனைவி புகார்

பாவூர்சத்திரம் அருகே மகனை அழைத்துக் கொண்டு கள்ளக்காதலியுடன் ஓடிய கணவனையும், குழந்தையையும் மீட்டுத் தரும்படி மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். பாவூர்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரியை சேர்ந்தவர் முருகன் (34). பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வபாக்கியம் (31). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டு ஆகிறது. மஹா (5), மாதேஸ் (2) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முருகனுக்கும், இதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி செல்வி (30) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. செல்விக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளது.



இவர்களது கள்ளத்தொடர்பு செல்வபாக்கியத்திற்கு தெரிந்துவிட்டதால் அவர் கணவனை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் யாருக்கும் தெரியாமல் தொடர்பை வளர்த்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி முருகன் தனது இரண்டு வயது மகன் மாதேஸை சுரண்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு திரும்பவில்லை. இதே போல் அன்று முதல் செல்வியையும் காணவில்லை. இவர்கள் இருவரையும் உறவினர்கள் மூலம் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் செல்வ பாக்கியம் கள்ளக்காதலியுடன் ஓடிய கணவனையும், குழந்தையையும் கண்டுபிடித்து தரும்படி பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=23144


No comments:

Post a Comment