Wednesday, June 30, 2010

வீட்டு முன் அமர்ந்து பெட்டி,படுக்கையுடன் இளம்பெண் போராட்டம்


மேட்டூர் அருகே காதலன் வீட்டு முன், பெட்டி, படுக்கையுடன் இளம்பெண் போராட்டம் நடத்தினார்.சேலம் மாவட்டம், மேட்டூர் சதுரங்காடியை சேர்ந்தவர் நகராட்சி லாரி டிரைவர் தமிழ்வேலன். அவரது மகள் புவனேஸ்வரி (20); தனியார் மொபைல் கடையில் வேலை பார்க்கிறார்.மேட்டூர் பொன்னகரை சேர்ந்த வி.ஏ.ஓ., மணியின் மகன் பாலமுருகன் (எ) பாலாஜி; எம்.பி.ஏ., படித்துள்ள அவர், அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.



புவனேஸ்வரியும், பாலாஜியும் காதலித்து வந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன், பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் பெற்றோர் வீட்டில் இருந்த புவனேஸ்வரி, நேற்று காலை, தன் உடைமைகளுடன் பாலாஜி வீட்டுக்கு சென்றார். பாலாஜியின் பெற்றோர், வீட்டில் இல்லாததால், தனியாக இருந்த பாலாஜிக்கும், புவனேஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டது. புவனேஸ்வரியை வெளியேற்றிய பாலாஜி, மெயின்கேட்டை பூட்டிச் சென்று விட்டார். அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி, உடைமைகளுடன் பாலாஜி வீட்டுக்கு வெளியில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டார்.



புவனேஸ்வரி கூறியதாவது:இன்சூரன்ஸ் பாலிசி போடுவது சம்பந்தமாக பேச, ஒரு ஆண்டிற்கு முன் பாலாஜி, எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்போதிருந்தே நாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். இரு மாதங்களுக்கு முன், மேட்டூர் முனியப்பன் கோவிலில் பாலாஜி, என் கழுத்தில் தாலி கட்டினார்.திருமணத்தை பதிவு செய்வதாக கோவைக்கு அழைத்து சென்று, அங்கு என்னை அவரது ஆசைக்கு இணங்க வைத்தார். கடந்த சித்திரை முதல் தேதி, பெற்றோர் என்னை பார்க்க விரும்புவதாக கூறி வீட்டிற்கு அழைத்தார்.



நான் அங்கு சென்ற போது, அவரது பெற்றோர் இல்லை. "நாம் ஜாலியாக இருப்பதற்காகவே அழைத்தேன்' என கூறி, அன்றும் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார். பலமுறை மன்றாடியும், பாலாஜியும், அவரது பெற்றோரும் என்னை அவர் வீட்டில் சேர்க்க மறுத்து விட்டனர். பாலாஜி என்னை ஏமாற்ற முயன்றதால், அவரது வீட்டுக்கு பெட்டி படுக்கையுடன் வந்து விட்டேன்.இவ்வாறு புவனேஸ்வரி கூறினார்.



அங்கு வந்த பாலாஜி கூறுகையில், "புவனேஸ்வரியை திருமணம் செய்து கொண்டதற்கோ, உறவு கொண்டதற்கோ எந்த ஆதரமும் இல்லை; வேண்டுமென்றால் போலீசில் புகார் கொடுக்கட்டும்; விசாரணையில் உண்மை தெரியும்' என்றார்.ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக அமர்ந்திருந்த புவனேஸ்வரி, தூக்க மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறியதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அவரது பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=28885



Queries :


1. Sex on false promise of marriage is rape. Why she never went to police to file a formal complaint when she had the courage to play a good show for the media?

2. She informs to the media that Balaji treated her like a prostitute .Why she permitted that kind of act and what makes her to treat it as an inappropriate act after several months?

3. She got married in Mettur and travelled to Coimbatore to get their marriage registered. If this is true, what excuse was given to the girl’s parents before travelling to Coimbatore?

4. What is the role played by her parents in this drama? What is the need for them to come and take her to the hospital to end the show of the day?

5. What is the monetary benefit expected out of this show?

6. What makes the media to believe that Balaji is her lover when there is no material /circumstantial evidence to prove the women’s story?

http://presscouncil.nic.in/NORMS-2010.pdf





Monday, June 21, 2010

மதுரை அப்பார்ட்மென்ட் பெண் கொலையில் திருப்பம்: கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட விபரீதம்



மதுரை எஸ்.எஸ்.காலனி அப்பார்ட்மென்ட்டில் நகை, பணத்திற்காக பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக, கள்ளத்தொடர்பால் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.


மதுரை பொதும்புவைச் சேர்ந்த நடராஜன் மகள் கயல்விழி(38). இவரது கணவர் ராஜேந்திரன். இரு ஆண்டுகளாக மலேசியாவில் கார் மெக்கானிக்காக உள்ளார். இவர்களது மகள் சங்கவி(16), மகன் அஜய்(8). கடந்த மாதம் எஸ்.எஸ்.காலனியில் உள்ள "விநாயகா' அப்பார்ட்மென்ட்டின், நான்காவது மாடியில் வாடகை வீட்டில் குழந்தைகளுடன் குடியேறினார். ஜூன் 18ல் பள்ளிக்கு சென்றுவிட்டு சங்கவி, அஜய் திரும்பிய போது வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டினுள் மின்விசிறி ஓடிக்கொண்டிருந்ததால் சந்தேகமடைந்து, நேற்று முன் தினம் காலை கதவை உடைத்து பார்த்தபோது, கயல்விழி இறந்து கிடந்தார்.


மூச்சுத்திணற வைத்து கொல்லப்பட்டிருந்தது தெரிந்தது. அவரது 30 பவுன் நகைகள், 20,000 ரூபாய் திருடப்பட்டிருந்ததால், நகை, பணத்திற்காக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.


திருப்பம்: திடீர் திருப்பமாக, கள்ளத்தொடர்பு காரணமாக கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

போலீசார் கூறியதாவது :ஏற்கனவே கயல்விழி, மதுரை விசுவாசபுரியில் குடியிருந்தபோது, சிலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது வெளியே தெரிந்தவுடன், எஸ்.எஸ்.காலனியில் குடியேறி உள்ளார். தனது தொடர்புகள் இந்த குடியிருப்பில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வாட்ச்மேன் இல்லாத இந்த அபார்ட்மென்ட்டையும், ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத நான்காவது மாடி வீட்டையும் தேர்வு செய்திருக்கிறார். திடீரென்று அடிக்கடி வீட்டிலிருந்து வெளியே செல்லும் இவர், பல மணி நேரம் கழித்து வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் தான், கொலை நடந்த அன்று வீடு பூட்டப்பட்டிருந்ததால், "அம்மா எங்கேயாவது வெளியே சென்றிருப்பார்' என்று அவரது பிள்ளைகள் இரவு முழுவதும் எதிர்பார்த்து இருந்திருக்கின்றனர். போலீசை திசை திருப்புவதற்காகவே நகை, பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கயல்விழிக்கு அறிமுகமான இரண்டு பேர், ஜூன் 18 காலை வந்துள்ளனர். அவர்களுக்கு கயல்விழி ஜூஸ் தந்துள்ளார். ஒருவருடன் வைத்திருந்த தொடர்பை மறைத்து, மற்றவருடன் கயல்விழி தொடர்பு வைத்துள்ளார்.இப்படி ஒவ்வொருவருக்கும் தெரியாமல் "தொடர்பை' தொடர்ந்திருக்கிறார்.


இதை எப்படியோ அறிந்த, கள்ளத்தொடர்பு வைத்திருந்த நபர், நண்பருடன் கயல்விழி வீட்டிற்கு வந்திருக்கலாம். பின், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் கயல்விழியை கொன்று, இதுவரை அவருக்கு செலவு செய்த தொகைக்கு ஈடாக, "கிடைத்தவரை லாபம்' என்று, நகை, பணத்தை எடுத்துச் சென்றிருக்கலாம்.

இந்த கோணத்திலும் விசாரணை நடத்துகிறோம். மேலும் போலீஸ்காரர் ஒருவர் மற்றும் பியூட்டி பார்லர் நடத்தும் பெண்ணின் கணவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்தும் விசாரிக்கிறோம், என்றனர்.

மொபைல் போன் எங்கே?இதுபோன்ற மர்மக் கொலைகளில், போலீசாருக்கு துப்பு துலங்க உதவுவது மொபைல் போன். கயல்விழி எப்பொழுதும் மொபைல் போனில் பேசிக் கொண்டிருப்பார் என்ற தகவல் கிடைத்ததால், அவரது மொபைல் போனை தேடினர். அதையும் கொலையாளிகள் முன்னெச்சரிக்கையாக எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது.அந்த எண்ணுக்கு போன் செய்தபோது, "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட மொபைல் போன் நிறுவனத்தின் மூலம், கயல்விழிக்கு யார் யார் பேசினர்; கடைசியாக பேசியது; எந்த எண்ணுக்கு அதிகமாக பேசினார் போன்ற விவரங்களை போலீசார் சேகரிக்கின்றனர்.









Sunday, June 20, 2010

சுயஉதவிக் குழு மோசடி பெண் வக்கீல் கைது


நெல்லையில் மகளிர்சுய உதவிக்குழு நிதியை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்த பெண் வக்கீல் கைது செய்யப்பட்டுள்ளார்.


நெல்லை மாவட்டம் அச்சம்பாடு பகுதியை சேர்ந்த ஆனந்தராபின் மனைவி பிரான்சிஸ் ரூபி. அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் மனைவி பொன்மாரி (49) இருவரும் வழக்கறிஞராக வள்ளியூரில் வேலை செய்து வருகின்றனர். பொன்மாரி மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருந்து வருகிறார். பிரான்சிஸ் ரூபி அந்த மகளிர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.


இதில் மகளிர் சுயஉதவிக்குழுவில் இருக்கும் பிரான்சிஸ் ரூபி உட்பட சுமார் 15 பெண்களின் மகளிர் குழு நிதியை வங்கியில் செலுத்தாமல் பொன்மாரி கையாடல் செய்துள்ளார். இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து பொன்மாரி கைது செய்யப்பட்டார்.


சுயஉதவிக் குழு மூலம் பொதுமக்களை ஏமாற்றுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஸ்ராகர்க் எச்சரித்துள்ளார்

பாவூர்சத்திரம் அருகே மகனை அழைத்து கொண்டு கள்ளக்காதலியுடன் கணவன் ஓட்டம் : மீட்க கோரி மனைவி புகார்

பாவூர்சத்திரம் அருகே மகனை அழைத்துக் கொண்டு கள்ளக்காதலியுடன் ஓடிய கணவனையும், குழந்தையையும் மீட்டுத் தரும்படி மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். பாவூர்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரியை சேர்ந்தவர் முருகன் (34). பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வபாக்கியம் (31). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டு ஆகிறது. மஹா (5), மாதேஸ் (2) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முருகனுக்கும், இதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி செல்வி (30) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. செல்விக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளது.



இவர்களது கள்ளத்தொடர்பு செல்வபாக்கியத்திற்கு தெரிந்துவிட்டதால் அவர் கணவனை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் யாருக்கும் தெரியாமல் தொடர்பை வளர்த்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி முருகன் தனது இரண்டு வயது மகன் மாதேஸை சுரண்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு திரும்பவில்லை. இதே போல் அன்று முதல் செல்வியையும் காணவில்லை. இவர்கள் இருவரையும் உறவினர்கள் மூலம் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் செல்வ பாக்கியம் கள்ளக்காதலியுடன் ஓடிய கணவனையும், குழந்தையையும் கண்டுபிடித்து தரும்படி பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=23144


சிறைக்குள் போதைபொருள் வீசிய பெண் அதிரடி கைது

சேலம் பெண்கள் கிளை சிறைக்குள் போதை பொருள் வீசி மகள் மூலம் கைதிகளுக்கு விற்பனை செய்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். சேலம் இரும்பாலை ரோடு கொல்லப்பட்டியை சேர்ந்தவர் மைதிலி. அவர் கஞ்சா கடத்தல், போதை பொருள் விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டார். மைதிலியை போலீஸார் பெண்கள் கிளை சிறையில் கைது செய்து அடைத்தனர். மைதிலியின் தாயார் சாந்தி(55), மகளை பார்க்க அடிக்கடி கிளை சிறைக்கு வந்து சென்றுள்ளார். மகள் மூலம் பெண்கள் கிளை சிறைக்குள் போதை பொருள்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார்.



அதன்படி சாந்தி பெண்கள் கிளை சிறை சுற்றுச்சுவர் அருகே இருந்து சிறைக்குள் போதை பொருள்களை வீசி எறிந்துள்ளார். அதை எடுத்து மைதிலி சக பெண் கைதிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த புகார் குறித்து சிறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர். தமிழக பெண்கள் கிளை சிறைத் துறை டி.ஐ.ஜி. ராஜசவுந்தரி சிறைக்குள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, சுற்றுச்சுவர் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கி சென்றார். பெண்கள் கிளை சிறையை சுற்றி வார்டன்கள் ரோந்து சென்றனர். கிளை சிறை சுற்றுச்சுவர் அருகே நின்றிருந்த சாந்தி, பொட்டலங்களை மடித்து சிறைக்குள் வீசி எறிந்து கொண்டிருந்தார். சிறை போலீஸார் சாந்தியை சுற்றி வளைத்து பிடித்தனர். சிறைக்குள் வார்டன்கள் சென்று ஆய்வு செய்த போது, ஆறு பொட்டலம் பான்பராக், 17 மூக்குப்பொடி டப்பா ஆகியவை சாந்தி சிறைக்குள் வீசியது தெரியவந்தது. மைதிலி மூலம் பெண்கள் கிளை சிறை கைதிகளுக்கு சாந்தி போதை பொருள் விற்பனை செய்ய உதவியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சிறை அதிகாரிகள் புகார் அளித்தனர். சிறைக்குள் போதை பொருள்களை வீசி எறிந்த சாந்தியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=23091


குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த நான்கு பெண்கள் சிக்கினர்

குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து பச்சிளம் குழந்தைகளை தத்து எடுத்து, அவற்றை குழந்தையில்லாதோர் மற்றும் வெளி மாநிலத்தவருக்கு விற்கும் "நெட்வொர்க்கின்' உறுப்பினர்களை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கடந்த 5ம் தேதி காலை மாதவரம் தனியார் மருத்துவமனையில், திருவொற்றியூர் சார்லஸ் நகரைச் சேர்ந்த முரளிதரன்(37) மனைவி கவிதாவுக்கு(29) பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை, மர்மப் பெண் ஒருவரால் கடத்தப்பட்டது.மாதவரம் போலீசார், குழந்தையை கடத்திச் சென்ற மர்மப் பெண்ணின் விவரங்களை, கடத்தப்பட்ட குழந்தையின் பாட்டி அமுதா மற்றும் மருத்துவமனை வளாகத்தில் மர்மப் பெண்ணை பார்த்தவர்களிடம் விசாரித்தனர்.



அவர்கள் தெரிவித்த விவரங்களின்அடிப்படையில், மர்மப் பெண்ணின் படம் வரையப்பட்டு, போலீசார் தேடுதல்வேட்டையில் இறங்கினர்.சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின்பேரில், மாதவரம் துணை கமிஷனர் ஆனி விஜயா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையிலான தனிப்படை போலீசார், குழந்தை கடத்தல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால், இன்று வரை காணாமல் போன பெண் குழந்தை கிடைக்கவில்லை.கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி, புதுச்சேரி, பண்ருட்டி ஆகிய இடங்களில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த கும்பல், போலீசில் சிக்கியது. இது தொடர்பாக தனலட்சுமி, பெரம்பூரைச் சேர்ந்த கிரிஜா, அவரது கணவர் சிவா, ராணி, பாதிரியார்கள் அல்போன்ஸ் சேவியர், செல்வம், புதுச்சேரியைச் சேர்ந்த லலிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாதவரத்தில் குழந்தை கடத்திய பெண்ணுக்கும், மேற்கண்ட கும்பலுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை செய்யப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் மாதவரம் அடுத்த மூலக்கடை பஸ் நிறுத்தம் அருகே குழந்தையுடன் சந்தேகத்திற்கிடமாக நின்ற பெண், தனிப்படை போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில் அவர், பாலவாக்கம் யுனிவர்சிட்டி அவென்யூ, ஒன்றாவது முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த நான்சி(28) என்பது தெரிந்தது.




கடந்த 2007ல் திருமணமான அவரது கணவர், மாரடைப்பால் இறந்துவிட்டார். இதையடுத்து, சினிமா மற்றும் "டிவி' சீரியல்களில் நடித்து பணம் சம்பாதிக்க முயற்சித்தார். ஆனால், எதிர்பார்த்தபடி பெரிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. அப்போது, நீலாங்கரை டாஸ்மாக் கடையில் வேலை செய்து வந்த ஜெயபிரசாத்(36) என்பவருடன் நான்சிக்கு பழக்கம் ஏற்பட்டது.அவர் சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக நான்சியுடன் நெருங்கிப் பழகினார்.ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பிய அவர்களுக்கு போதிய பணவசதி இல்லை. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்தனர். இந்நிலையில், குழந்தைகளை தத்து எடுத்து பணக்காரர்கள் மற்றும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்கும் திட்டம் உருவானது.




இதையடுத்து, புதுச்சேரியில் அங்கீகரிக்கப்படாத ஆசிரமங்களில் இருந்து, தம்பதியர்போல் குழந்தைகளை தத்து எடுத்தனர். அவற்றை கணிசமான தொகைக்கு விற்றனர். இதற்கு ஜெயபிரசாத்தின் மனைவி ஆஷா என்கிற கலைச்செல்வி உதவினார்.மேலும், நான்சி கொடுத்த தகவலின்படி, விற்கப்பட்ட ஜோஸ்மியா என்ற எட்டு மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது. ஆஷாவின் அக்கா கவிதா, சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து வந்த ஆண்டாள் ஆகியோரும் சிக்கினர். மேற்கண்ட மருத்துவமனைக்கு, கடந்த எட்டு மாதத்திற்கு முன், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் மனைவி அருள்மொழி மகப்பேறு சிகிச்சைக்கு வந்தார்.ஆனால், குழந்தை பெறும் வாய்ப்பை இழந்தார். அவரை சந்தித்த கவிதா, ஆண்டாள் ஆகியோர், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் அழகான ஆண் குழந்தை வாங்கி கொடுப்பதாகக் கூறினார்; அவர்களும் சம்மதித்தனர்.



இதையடுத்து ஜெயபிரசாத், ஆஷா மற்றும் நான்சி மூலம் கண்ணதாசன் என்று பெயரிடப்பட்ட இரண்டு மாத குழந்தையை வாங்கிக் கொடுத்தனர்.இதையடுத்து, துரிதமாகச் செயல்பட்ட தனிப்படை போலீசார், கவிதா, நான்சி, ஆஷா என்கிற கலைச்செல்வி மற்றும் ஆண்டாள் ஆகிய நால்வரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கண்ணதாசன் என்ற ஒரு வயது ஆண் குழந்தையையும் மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகள், சென்னை பார்க் டவுனில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன.கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான ஜெயபிரசாத், கிருஷ்ணகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.



சந்தேகம்: கடத்தப்பட்ட பெண் குழந்தை கிடைக்காத நிலையில், வேறு இரு குழந்தைகள் மற்றும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நான்கு பெண்கள் சிக்கினர். இது, மாதவரம் தனிப்படை போலீசாருக்கு ஆறுதலாக இருந்தாலும், மாதவரம் தனியார் மருத்துவமனையில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குழந்தை, கிடைக்காமல் திணறி வருகின்றனர்.விசாரணை மூலம் வரையப்பட்ட மர்மப் பெண்ணின் படமும், போலீசாரின் தேடுதல் வேட்டைக்கு உதவவில்லை. இந்நிலையில், உண்மையிலேயே அக்குழந்தை கடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முன்விரோதம் காரணமாக விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.







Tuesday, June 15, 2010

கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி




ராமநாதபுரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி கழிப்பறையிலே பெண் குழந்தையை பெற்றெடுத்து அப்படியே போட்டுசென்றுள்ளார். மாணவியின் இச்செயலை கண்டித்து அவருக்கு டி.சி.,யை கொடுத்துள்ளது பள்ளி நிர்வாகம்.


ராமநாதபுரத்திலுள்ள தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சுரிதா(மாணவி நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது) . திருமணம் ஆகாமலே கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணவி சற்று குண்டாக இருந்ததால் , கர்ப்பமாக இருந்தது வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனிடையே கோடை விடுமுறை முடிந்த நிலையில், வழக்கம் போல் கர்ப்பிணி மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் படித்த கொண்டிருந்த போது மாணவி , திடீரென கழிப்பறை செல்ல அனுமதி கேட்டு சென்றுள்ளார். அங்கு யாருடைய உதவியுமின்றி தானாக குழந்தையை பெற்று, அந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் போட்டுவிட்டு வகுப்பறை வந்துள்ளார். கழிப்பறையில் மற்ற மாணவிகள் சென்ற போது, பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது .


இதை பார்த்த அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர். ஆசிரியர்கள் கழிப்பறையில் பெண் குழந்தை இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டு, உடனடியாக குழந்தையை மீட்டு உரிய சிகிச்சை அளித்துள்ளனர். பின் சந்தேகமான மாணவியிடம் விசாரித்ததில் குழந்தை பெற்றதை ஒப்புகொண்டார். ஆசிரியர்கள் குழந்தை பெற்ற மாணவியின் உடையை மாற்றி உடனடியாக அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பள்ளியில் மாணவி குழந்தை பெற்றது பெரும் சர்ச்சையை எழுப்பியதால் பள்ளி நிர்வாகம், மாணவியின் டி.சி.,யை அவரது பெற் றோரிடம் வழங்கினர்.


ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: பள்ளியில் நடந்த சம்பவம் உண்மைதான். எனக்கு தாமதமாகத் தான் தெரியவந்தது. மாணவியின் விருப்பமின்றி டி.சி.,யை கொடுக்க கூடாது. மாணவியின் நலன் கருதி அவருக்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ அதை செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=19970


பெற்ற மகன் மீது தாய்க்கு பயம் : கோர்ட்டுக்கு வந்தார் மூதாட்டி




"சொந்தமாக சம்பாதித்த சொத்தில், உறவுகள் பங்கு கேட்டு தொந்தரவு செய்வதால், கடைசி காலத்தில் அமைதியாக வாழ பாதுகாப்பு வேண்டும்' எனக் கோரி, 80 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கில், கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை, என்.ஜி.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்தவர் ராணிராசாமணி(80); ஓய்வு பெற்ற மாநகராட்சி பள்ளி ஆசிரியை. இவரது கணவர் ராமையா; ஹெல்த் இன்ஸ்பெக்டராக பணியாற்றி 1991ல் ஓய்வு பெற்று, 2000ல் இறந்து விட்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள்; அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. "ஓய்வூதியம் பெற்று தனிமையில் வசிக்கும் எனக்கு, மகன், மருமகள் தொந்தரவு செய்யக்கூடாது; கடைசி வரை நிம்மதியாக வாழ போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவிட வேண்டும்' என, கோர்ட்டில் இவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மூதாட்டி தாக்கல் செய்துள்ள மனு விவரம்: கடந்த 1950ல் எனக்கும், என் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்த ராமையாவுக்கும் திருமணம் நடந்தது. மூன்று மகன், ஒரு மகள் பிறந்தனர். 1957ல் எனக்கு ஆசிரியர் பணி கிடைத்தது. காந்திபுரத்தில் வாடகை வீட்டில் குடியிருந்தோம். 1962ல் அரசு ஊழியர்களுக்காக என்.ஜி.ஜி.ஓ., காலனி உருவாக்கப்பட்டது. எங்கள் இருவரின் சேமிப்பு மற்றும் நகையை விற்று 500 ரூபாய்க்கு இடம் வாங்கி, 1969ல் வீடு கட்டி குடியேறினோம். எங்களது குழந்தைகள் படித்து, இன்று இன்ஜினியர், டாக்டராக பல்வேறு இடங்களில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். எனது கணவர் 1991ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு கிடைத்த ஓய்வூதியத்தால் மேலும் இரு அறைகள் கட்டப்பட்டன. இந்த வீடு கட்ட, இருவரும் சேர்ந்தே கடன் வாங்கினோம். இது கணவன், மனைவி இருவரின் பெயரில் உள்ள சொத்தாகும். கணவர் இறந்த பின், என் மகன்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சொத்து கேட்டு, கோவை மாவட்ட தலைமை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு தற்போது மேல் கோர்ட் விசாரணையில் உள்ளது.

குறிப்பிட்ட சொத்தில் எனக்கு பாதி பங்கு உண்டு. அதுபோக, கணவரின் சொத்திலும் ஐந்தில் ஒரு பங்கு எனக்கு சேர வேண்டும். இப்படி இருக்கும் போது, சொத்தில் ஒரு மகன் மட்டும் சொந்தம் கொண்டாடுவதில் நியாயம் இல்லை. வயதான காலத்தில் மாத்திரை மற்றும் கடவுளின் கருணையால் வாழ்ந்து கொண்டுள்ளேன். எனது இறுதிகாலத்தை நிம்மதியாக, மரியாதையாக கழிக்க விரும்புகிறேன். இதில் யாருடைய தலையீடும் வேண்டாம். மகனின் தேவையற்ற நடவடிக்கையால் மனமுடைந்துள்ளேன். என்னை வீட்டை விட்டு வெளியேற்ற சட்டவிரோத நடவடிக்கை நடந்து வருகிறது. எனவே, எனது புகாரை விசாரித்து, கடைசி வரை அமைதியான வாழ்க்கை வாழ வேண்டியும், மகனின் தொந்தரவில் இருந்து பாதுகாப்பு அளிக்கவும் துடியலூர் போலீசுக்கு உத்தரவிட வேண்டும், என மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த ஜே.எம்.எண்: கோர்ட் மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தி, "மூதாட்டிக்கு யாரும் எவ்வித தொந்தரவும் தரக்கூடாது. யாரேனும் இடையூறு செய்தால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 1க்கு ஒத்திவைத்தார்.


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=19919


Monday, June 14, 2010

British MP caught with toyboy lover


A new Tory MP who sought to woo Christian voters at the General Election has been caught cheating on her husband with a toyboy lover.


Caroline Nokes, 37, a 'Cameron Cutie' who once boasted that she was too attractive to be a politician, had the personal support of David Cameron during her election campaign.



But she has heaped embarrassment on the Prime Minister by being caught enjoying a tryst in a hotel room with James Dinsdale, a Conservative activist ten years her junior.



Mrs Nokes and her husband Marc, 42, who have an 11-year-old daughter and celebrated their 15th wedding anniversary last week, refused to comment.



But the MP's young lover, a Conservative councillor and former leading light in the party's youth wing, Conservative Future, said: 'I can confirm Caroline Nokes and I have had a sexual relationship. I have no further comment to make.'

Last week's tryst, said to be the latest secret meeting in a four-year affair, was revealed in a Sunday newspaper.



It was claimed that Mrs Nokes, who won Romsey and Southampton North from the Liberal Democrats with a 4,156 majority, had on Monday stayed late at the Commons for a debate on political reform.



She reportedly sent Mr Dinsdale a text from inside the chamber saying she was 'bored to death' before taking a taxi to the four-star Kensington Close hotel a couple of miles away.



Moments after she had gone into her £130-a-night room, Mr Dinsdale arrived dressed in a hoodie.


He was photographed knocking on the door and being admitted by a smiling Mrs Nokes.



Two hours later, their late-night assignation complete, Mr Dinsdale left the hotel and drove off. Mrs Nokes stayed the night before leaving in a taxi the next morning.


A friend told the Sunday Mirror that the pair met at the Conservative conference in Bournemouth in October 2006 - and had disappeared to the young man's bedroom together for two hours on the first night.



They are since said to have met for 'occasional' casual sex, with opportunities arising often when Mr Dinsdale worked for billionaire Tory donor Lord Ashcroft, who funded a campaign to win key seats.


The friend claimed the relationship between Mrs Nokes and Mr Dinsdale was 'purely physical', adding: 'It's a very loose arrangement - sometimes they would spend the whole day together, sometimes just a few hours.



'Months would pass between meetings, but they never completely broke it off.



'They would get a buzz from sending each other quick text messages with when and where they would meet.'


During the General Election campaign, Mr Cameron was pictured with Mrs Nokes and described her as a 'good, hard-working local young woman'.



Mrs Nokes, a former chief executive of the National Pony Society, lives with her husband and daughter in a £900,000 house on the edge of the New Forest.



On her official website, she says: 'I must record my thanks for the unstinting support of my husband and daughter who through no fault of their own have to suffer from having a "political wife" and mother.'



She also writes: 'I promise to be transparent in all my dealings.'


In 2005, when she took part in a photoshoot for Glamour magazine, Mrs Nokes said: 'I've been told I'm too pretty to be in politics.'



Earlier this year, she was one of the parliamentary candidates who signed a pledge that they would 'respect, uphold and protect the right of Christians to hold and express Christian beliefs and act according to Christian conscience'.


It was produced by Christians together with their Westminster 2010 Declaration of Christian Conscience before the election.


A clause on marriage in the declaration states: 'We pledge to support marriage - the lifelong covenantal union of one man and one woman as husband and wife. We believe it is divinely ordained, the only context for sexual intercourse.'


A Conservative Party spokesman refused to comment on the affair - but said he doubted Mrs Nokes would have had time to claim on Parliamentary expenses for the £130-a-night room used for the tryst.



Mr Dinsdale lives with his parents in a £450,000 house in Bury St Edmunds, Suffolk, and is a Conservative councillor in the town. He works in publishing in Cambridge.



Last night Mr Nokes's mother Patricia insisted that her son's marriage to the MP would last. 'He is coping very well and they are very much together,' she said. 'This will not finish their relationship.'



Source :
dailymail.co.uk


Sunday, June 13, 2010

காதலனை கூலிப்படை ஏவி தாக்கிய டிவி நடிகை கைது


திருமணம் செய்ய மறுத்த காதலனை கூலிப்படையை ஏவி தாக்கிய ஆந்திர டி.வி. நடிகை கைது செய்யப்பட்டார்.


ஆந்திராவை சேர்ந்தவர் டிம்பிள் வர்மா. தெலுங்கு டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். டி.வி, நடிகரான ஸ்ரீதர் என்பவரும், இவரும் காதலித்து வந்தனர். இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தனர். தன்னை திருமணம் செய்வதாக கூறி வந்த ஸ்ரீதர், திடீரென வேறொரு பெண்ணை காதலிக்கத் தொடங்கினார். டிம்பிளை கைகழுவினார். இதனால் ஆத்திரம் அடைந்த டிம்பிள், ஸ்ரீதரை பழி வாங்கவும், தனது காதலை வெளி உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவும் முடிவு செய்தார்.


இதற்காக, தனது உதவியாளர்கள் மணி, நாகராஜ் மற்றும் பிரபாகர் ஆகியோரின் உதவியை நாடினார். கடந்த 8ம் தேதி ஸ்ரீதர் வெளியே சென்றிருந்தபோது இந்த மூன்று பேரையும் ஏவி அவர் மீது தாக்குதல் நடத்தினார். அப்போது, செல்வராஜ் என்ற மற்றொரு டிவி நடிகரின் பெயரை சொல்லி அவர்கள் தாக்கினர். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்த ஸ்ரீதர், செல்வராஜின் ஆட்கள் தன் மீது ஆசிட் வீச முயன்றதாக கூறினார். போலீஸ் விசாரணையில் அது வெறும் எரிச்சாராயம் என்பது தெரிந்தது.


இதற்கு அடுத்த நாள், மணியும் டிம்பிளும் நாடக ஷூட்டிங்குக்காக ஐதராபாத் அருகே சென்றபோது நடுரோட்டில் ஒரு பெண் படுத்து இருந்ததாகவும், அவரிடம் சென்று விசாரித்தபோது திடீரென தங்கள் மீது மிளகாய் பொடியை தூவி, இரும்பு தடியால் தாக்கியதாகவும் போலீசில் டிம்பிள் புகார் கொடுத்தார். அப்போது, தன்னை பழி வாங்குவதற்காக இந்த தாக்குதலை நடத்துவதாக அந்த பெண் கூறியதாக தெரிவித்த டிம்பிள், தாக்குதலில் ஏற்பட்ட காயங்களையும் காட்டி நாடகமாடினார். இந்த தாக்குதலால் டிம்பிள், ஸ்ரீதர் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது பேட்டி அளித்த டிம்பிள், தானும் ஸ்ரீதரும் நெருங்கி காதலிப்பதாக அறிவித்தார்.


போலீஸ் நடத்திய விசாரணையில், இந்த தாக்குதல்கள் அனைத்துமே டிம்பிளின் ஏற்பாடுதான் என்பது தெரிந்தது. இதையடுத்து, டிம்பிள், மணி, நாகராஜு ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரபாகரை தேடி வருகின்றனர். இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.