Monday, August 16, 2010
காசேதான் கடவுளடா
காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கூறி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள, எம்.பி.ஏ., பட்டதாரி பெண் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி சாலை ரோட்டைச் சேர்ந்த மாரிமுத்து மகள் ராஜேஸ்வரி (23); எம்.பி.ஏ., பட்டதாரி. மண்ணச்சநல்லூரைச் சேர்ந்தவர் குணசேகரன்.
இருவரும் ஓராண்டாக காதலித்து வந்தனர். காதலில் விரிசல் ஏற்பட்டது.திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை ராஜேஸ்வரி வந்தார். கலெக்டர் கார் நிற்கும் இடத்துக்கு சென்று, கையில் வைத்திருந்த மனுவை தூக்கிப் பிடித்தார், இன்னொரு கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை, "மள மள'வென குடிக்கத் துவங்கினார்.அருகிலிருந்தவர்கள் சத்தம் போட்டவுடன், மகளிர் போலீசார், உடனே அவரைப் பிடித்து, விஷத்தை வெளியே எடுக்க வைத்தனர். ராஜேஸ்வரியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
ராஜேஸ்வரி இரண்டு கடிதங்கள் எழுதி இருந்தார். காதலன் குணசேகரனுக்காக எழுதிய கடிதத்தில், "குணா, நான் உன்னை ஒரு சதவீதம் கூட சந்தேகப்படவில்லை உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன். நீ முத்தமிட்ட உதடுகளை வேறு யாரும் முத்தமிடக் கூடாது. உன் கைப்பட்ட என் உடலில், வேறு யார் கையும் படக் கூடாது' என, உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.கலெக்டருக்கு எழுதிய கடிதத்தில், "என் பெயர் ராஜேஸ்வரி.
நானும், குணசேகரும் காதலித்து வந்தோம். திடீரென என்னுடன் பேசுவதை குணசேகர் குறைத்துக் கொண்டார்; பழகுவதை நிறுத்தி விட்டார். காரணம் கேட்டபோது, "அப்போது பிடித்தது பழகினேன்; இப்போது பிடிக்கவில்லை' என்கிறார். நம்பிக்கை துரோகத்துக்கு ஆளாகிய நான், மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். இது என்னைப் போல் படித்து, ஏமாறும் பெண்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.
நான் இறந்தால், என் காதலனிடமிருந்து மூன்று லட்ச:) ரூபாய் வாங்கி, என் பெற்றோருக்கு கொடுக்க வேண்டும்' என, எழுதப்பட்டிருந்தது. இச்சம்பவத்தால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment