Thursday, July 29, 2010

பெண் போலீசுடனான கள்ளக்காதலால் வந்த மோதல்

காதலன் வீரா

பெண் போலீசுடனான கள்ளக்காதலை கண்டித்ததால், மின்வாரிய ஊழியரை கொலை செய்து, பிணத்தை அடையாளம் தெரியாமல் எரித்த சம்பவம், சென்னையில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவரும்; கைதான கொலையாளியும் அந்த பெண் போலீசின் கள்ளக்காதலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


வேளச்சேரி நேரு நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (35). பெருங்குடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணியாற்றினார். கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அவரை காணவில்லை. அவரது தாய் செல்லம்மா வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ஏற்கனவே ராஜேந்திரன் மீது அவரது மனைவி அனிதா கிண்டி மகளிர் போலீசில் வரதட்சணை கொடுமை புகார் கொடுத்துள்ளார். இதற்காக ராஜேந்திரனையும், அவரது மனைவியையும் அழைத்து பேசினர். அதன்பின் ராஜேந்திரனை மர்ம ஆசாமிகள் 6 பேர் மார்ச் 6ம் தேதி தாக்கினர். மாமியார் பாக்கியலட்சுமிதான் ஆள் வைத்து தாக்கியதாக ராஜேந்திரன் புகார் கொடுத்தார்.


இந்த பின்னணியில் ராஜேந்திரன் மாயமாகி உள்ளதால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காணாமல் போனாரா, கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது. காணாமல் போனவருக்கும் மனைவிக்கும் இடையே பிரச்னை வர என்ன காரணம் என்ற விசாரணையில், வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக உள்ள சாஸ்திரக்கனி (37) தொடர்பு பற்றி தெரியவந்தது. தகவல் தந்தவர் ராஜேந்திரனின் தாய் செல்லம்மா.


ராஜேந்திரனுடன் சாஸ்திரக்கனிக்கு சிறு வயது முதல் பழக்கம். கனி வீட்டுக்கு ராஜேந்திரன் வந்து செல்வதும், இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றுவதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதன்பின்னர் பெண் போலீஸ் சாஸ்திரக்கனியை நோக்கி விசாரணை திரும்பியது. அவரைப் பற்றிய ரகசியத் தகவல்களை சேகரித்தனர். அதில் வீரா என்ற வீரராஜனுடன் தற்போது கனி தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்தனர். அப்படியென்றால் ஏற்கனவே பழகிய ராஜேந்திரன் கதி? அடுத்தகட்ட விசாரணையில் உண்மை தெரிந்தது. சாஸ்திரக்கனியும், வீராவும் பிடிபட்டனர். ராஜேந்திரனை கொன்று, திருவள்ளூரில் உடலை எரித்த விஷயம் வெளியானது.



நான் சாலிகிராமத்தில் வசித்து வருகிறேன். பிகாம் படித்து வந்தேன். முடிக்கவில்லை. விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவில் சேர்ந்தேன். கார் ஓட்டத் தெரியும் என்பதால் இன்ஸ்பெக்டரின் காரை ஓட்டி வந்தேன். இன்ஸ்பெக்டர் வேளச்சேரிக்கு மாறியதும் என்னையும் அழைத்து வந்தார். அப்போதுதான் சாஸ்திரக்கனியுடன் பழக்கம். அடிக்கடி சாஸ்திரக்கனியின் வீட்டுக்குச் சென்று உல்லாசமாக இருப்போம். அவர் கணவரை விட்டு பிரிந்து வசித்து வந்ததால், எந்த தடையும் இல்லை. குழந்தைகள் பள்ளிக்குச் சென்று விடுவார்கள். வீட்டில் அவர் மட்டும்தான் இருப்பார். அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருப்போம்.
இந்தநிலையில் ஒரு நாடகம் ஆடினேன். ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதாக எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்தேன். நான் பொய் சொன்னதை இன்ஸ்பெக்டர் முதல் அனைவரும் நம்பி விட்டனர். ஸ்டேஷனில் எனக்கு பார்ட்டி கொடுத்தனர்.


அதிலிருந்து சாஸ்திரக்கனிக்கு என் மீது பைத்தியம். எல்லா வகையிலும் என்னை குஷிப்படுத்த ஆரம்பித்தார். ஐபிஎஸ் ஆன பிறகும் என்னை விட்டு விடக் கூடாது என்று கெஞ்சுவார்; கொஞ்சுவார். அந்த சந்தோஷத்தில் எனக்கு தலைகால் புரியாமல் இருந்தேன்.


திடீரென்று ஒருநாள் ராஜேந்திரனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் கனி. அப்போது, மனைவியுடன் பிரச்னை என்று என்னிடம் அவர் கூறினார். பைக்கில் சென்றபோது 6 பேர் கும்பல் ராஜேந்திரனை தாக்கியது பற்றியும், மாமியார் தான் காரணம் என்றும் புலம்பினார். அதோடு விடாமல், தன்னுடைய வேலையை காலி செய்ய மாமியார் முயற்சிப்பதாக சந்தேகப்பட்டார். மாமியாரை கொலை செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார். நானும் ரூ.2 லட்சம் கொடுத்தால் தஞ்சாவூரில் இருந்து ஆள் வரவழைத்து கொலை செய்யலாம் என்றேன். அவரும் பணம் கொடுத்தார்.


அதுவரைக்கும் கனிக்கும் எனக்கும் இருந்த கள்ளத் தொடர்பு பற்றி அவருக்கு தெரியாது. என்னைப் பற்றி கனி அவரிடம் என்ன சொல்லியிருந்தாள் என்பதும் எனக்கு தெரியாது. ஒரு நாள் அவர் கனி வீட்டுக்கு வந்தபோது, விஷயம் தெரிந்து விட்டது.


எனக்கும் சாஸ்திரக்கனிக்கும் கள்ளக்காதல் இருப்பதை அறிந்து அதிர்ந்து போய் விட்டார். ஆனால் என்னைக் கண்டிக்கவில்லை. சாஸ்திரக்கனியை கடுமையாக கண்டித்துள்ளார். என்னிடம் நண்பர் போலவே பழகினார்.


இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மாமியாரை கொல்ல திட்டம் போட்டவர் என்பதால் உஷாரானேன். எப்படியும் என்னை கொலை செய்ய திட்டம் போடுவார் என்று சந்தேகம் வந்தது. தஞ்சையில் இருந்து என்னுடைய உறவினர்கள் முருகன், வேணுகோபால், சதீஷ் ஆகியோரை வரவழைத்தேன். அவர்களுடன் சென்று ராஜேந்திரனை கடந்த மார்ச் 25ம் தேதி சந்தித்தேன்.
“மாமியாரை கொலை செய்ய ஆட்கள் வந்துள்ளனர். நாம் சென்னையில் இருக்க வேண்டாம். நண்பர்களுடன் திருத்தணி செல்வோம்” என்று கூறி காரில் அழைத்துச் சென்றேன். திருத்தணி அருகே எல்லப்பநாயுடு பேட்டை செல்லும் வழியில் காட்டுக்குள் அவரை வெட்டிக் கொலை செய்தோம். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை எரித்தோம்.


மறுநாள், காலையில் கருகிய நிலையில் கிடந்த பிணத்தை கனகம்மா சத்திரம் போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால், அடையாளம் தெரியாத பிணம் என்று முடிவு கட்டியதால், நாங்கள் பயமின்றி இருந்தோம். ஆனால், ராஜேந்திரனின் அம்மா செல்லம்மா, சாஸ்திரக்கனி பற்றிய தகவல்களை சொல்லியதால் தான் சந்தேகம் எங்கள் மீது வந்தது. நாங்கள் மாட்டிக் கொண்டோம்.
இவ்வாறு வாக்குமூலத்தில் வீரா கூறியுள்ளார்.


வீரா உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் 4 பேரையும் திருவள்ளூருக்கு அழைத்துச் சென்று கொலை நடந்த இடத்தை பார்த்தனர். கொலையை மறைத்ததாக சாஸ்திரக்கனியும் கைது செய்யப்பட்டார். கள்ளக்காதல் கொலைக்கு பெண் போலீஸ் காரணமாக இருந்ததும், இறந்தவரும், கொலையாளியும் அந்த பெண் போலீசின் கள்ளக்காதலர்கள் என்பதும், மாமியாரை கொலை செய்ய கொடுத்த பணத்தில், அவரையே கொன்றதும் விசாரணையில் கிடைத்த புதிய தகவல்கள் என்றனர் போலீஸ் அதிகாரிகள்.

சாஸ்திரக்கனி போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்


என்னுடைய சொந்த ஊர் ராமநாதபுரம். எங்கள் ஊரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். ஒரே பள்ளியில் படித்தோம். படிக்கும்போதே எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. பல முறை உல்லாசமாக இருந்துள்ளோம். எங்களுடைய காதல் பெற்றோருக்குத் தெரியவந்தது.


அப்போது ராஜேந்திரனுக்கு வேலை கிடைக்காததால், செல்வராஜ் என்பவருடன் 1993ம் ஆண்டு எனக்கு திருமணம் செய்து வைத்தனர். அவர் தனியார் நிறுவனத்தில் கார் டிரைவர். 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ஒருவர் 10ம் வகுப்பும், மற்றொருவர் 8ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்தநிலையில் ராஜேந்திரனுக்கு மின்வாரியத்தில் வேலை கிடைத்தது. எனக்காக சென்னைக்கு மாறி வந்தார். நாங்கள் வேளச்சேரி ஒரண்டியம்மன் கோவில் தெருவில் தான் வசித்து வருகிறோம். நானும் அவரும் அடிக்கடி சந்தித்து வந்தோம். இது என் கணவருக்கு தெரிந்ததால் பிரிந்து சென்று விட்டார்.


நான் வேளச்சேரி காவல் நிலையத்தில் பணியாற்றினேன். போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த வீரா அறிமுகமானார். அவர், இன்ஸ்பெக்டருக்கு மிகவும் நெருக்கம். நான் வரவேற்பரையில் இருப்பேன். நான் கணவரை விட்டுப் பிரிந்தவள் என்று தெரிந்ததும், என்னுடன் நெருங்கிப் பழகினார். அவருக்குத் திருமணமாகவில்லை. இன்ஸ்பெக்டருக்கு தெரிந்தவர் என்பதால், அவரை மடக்கிப் போட்டால் பிரச்னை இருக்காது என்று நினைத்தேன். அதனால் எனக்கு கடினமான டூட்டி கொடுப்பதில்லை.


வீரா அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார். இது ராஜேந்திரனுக்குத் தெரிந்து விட்டது. அவர் என்னைக் கண்டித்தார். இதை வீராவிடம் தெரிவித்தேன். ஒருநாள் வீரா, ராஜேந்திரனை கொன்று விட்டதாக தெரிவித்தார். தன்னை ராஜேந்திரன் கொலை செய்வார் என்ற பயத்தில் அவரை கொலை செய்து விட்டதாக சொன்னார். மேலும் இன்ஸ்பெக்டர் தெரிந்தவர் என்பதால், நாமே ராஜேந்திரனின் அம்மாவிடம் சொல்லி காணவில்லை என்று புகார் கொடுப்போம். பின் அந்தப் புகாரை அப்படியே கிடப்பில் போட்டு விடலாம் என்று யோசனை கூறினார்.


இதற்கிடையில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றதாக வீரா சொன்னதும், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது. வீரா மீது உள்ள மோகத்தால், கொலையை மறைத்து விட்டேன். பின், ராஜேந்திரனின் அம்மா செல்லம்மாவிடம் சென்று ராஜேந்திரனைக் காணவில்லை என்று புகார் செய்யுங்கள் என்று கூறினேன். நானும் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் தைரியத்தில் புகார் செய்ய வைத்தேன். ஆனால் எனக்கும் ராஜேந்திரனுக்கும் தொடர்பு இருப்பதை செல்லம்மாள் போலீசில் சொல்லியதால் என்னை வடபழனிக்கு மாற்றி விட்டனர். இன்ஸ்பெக்டரும் வேறு பிரச்னையால் மாற்றப்பட்டார்.

இப்போது நானும், வீராவும் சிக்கினோம்.
இவ்வாறு தனது வாக்குமூலத்தில் சாஸ்திரக்கனி கூறியுள்ளார்.


பெண் போலீஸ் சாஸ்திரக்கனி


மின்வாரிய அதிகாரியை எரித்து கொ‌ன்ற பெண் காவல‌ர்



சென்னை வேளச்சேரி நேரு நகரை சேர்ந்த ராஜேந்திரன் (35) பெருங்குடியில் உள்ள மின்சார வாரியத்தில் மின் கணக்கீட்டாளராக வேலை பார்த்து வருகிறார். இவரை கடந்த மார்ச் மாதம் 31ஆ‌ம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து அவரது தாய் செல்லம்மாள் வேளச்சேரிகாவ‌ல்துறை‌யி‌ல் புகார் செய்தார். இது பற்றிகாவ‌ல்துறை‌யின‌ர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வ‌ந்தன‌ர்.

இதற்கிடையில் ராஜேந்திரனுக்கும், வடபழனி பெண் காவல‌ர் சாஸ்திரகனிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. பெண் காவல‌‌ர் சாஸ்திரகனி, திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதேபோல காணாமல் போன ராஜேந்திரனும் திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் ராஜேந்திரனும், பெண் காவல‌‌ர் சாஸ்திரகனியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் கள்ளக்காதலை வளர்த்தனர்.

காணாமல் போன ராஜேந்திரன், பெண் காவல‌‌ர் சாஸ்திரகனி வீட்டுக்கு அடிக்கடி வந்து தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் மின்வாரிய அதிகாரி திடீர் என்று காணாமல் போய் உள்ளார். இது காவ‌ல்துறை அதிகாரிகளுக்கு சாஸ்திரகனி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இத‌‌ற்‌கிடையே காவல‌ர்க‌ள் ந‌‌ண்ப‌ர்க‌ள் குழு‌வி‌ல் உ‌ள்ள ‌வீரராஜனுட‌ன் சா‌ஸ்‌திரக‌னி பழ‌கியதா‌ல் அவரை ராஜே‌ந்‌திர‌ன் க‌ண்டி‌த்ததாகவு‌ம் இதன‌ா‌ல் ஆ‌‌த்‌திர‌ம் அடை‌ந்த ‌சா‌ஸ்‌திர‌கனி தமது கூ‌ட்டா‌ளிகளுட‌ன் இணை‌ந்து ராஜே‌ந்‌திரனை ‌திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்‌ட‌ம் கே.கே.ச‌த்‌திர‌ம் எ‌ன்ற இட‌த்‌தி‌ற்கு கட‌த்‌தி எ‌ரி‌த்து கொலை செ‌ய்து ‌வி‌ட்டதாகவு‌ம் கூற‌ப்படு‌கிறது.

இது தொட‌ர்பாக சா‌ஸ்‌திரக‌னி உ‌ள்பட அவரது கூ‌ட்டா‌ளி ‌‌வீரரா‌ஜ‌ன் உ‌ள்பட 4 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர். தலைமறைவாக இரு‌க்கு‌ம் மேலு‌ம் 2 பேரை ‌பிடி‌க்க காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர நடவடி‌க்கை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.



காதலனுக்காக போராடிய பெண் கணவருடன் கைகோர்த்து சென்றார்


காதலனுக்காக அவரது வீட்டு முன் தர்ணா நடத்திய பெண், திடீரென முதல் கணவருடன் சேர்ந்து சென்றார்.
குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த தையாலுமூடு ராக்கோடு பகுதியை சேர்ந்தவர் அசோ கன் (27). மளிகை கடை வைத்திருந்தார். இவரது பக்கத்து ஊரான எள்ளுவிளையை சேர்ந்தவர் சந்தியா (23). இவர், 5 ஆண்டுக்கு முன்பு சென்னையில் பணிபுரிந்தபோது, செல்வம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சூர்யா, சந்துரு என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

செல்வத்துக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் சந்தியாவை விட்டுவிட்டு குழந்தைகளை அழைத்துச் சென்று அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். சந்தியா எள்ளுவிளைக்கே வந்துவிட்டார். அப்போது அசோகனுடன் பழக்கம் ஏற்பட்டு¢ நாளடைவில் காதலாக மாறியது. காதலுக்கு அசோகனின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் குருசடிக்கு சென்று திருமணம் செய்துகொண்டனர். பின்னர் சென்னையில் குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அசோகனை தொடர்பு கொண்ட அவரது பெற்றோர், சந்தியாவை மருமகளாக ஏற்றுக்கொள்வதாக கூறி ஊருக்கு அழைத்துள்ளனர். இதை நம்பி ராக்கோடு வந்த அசோகனை பெற்றோர் தரப்பினர் காரில் கடத்திச் சென்றனர். தட்டிக்கேட்ட சந்தியாவை அடித்து உதைத்து விரட்டினர். மறுநாள் காலை அசோகன் வீட்டு முன்பு சந்தியா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரப்பு ஏற்பட்டது.

மார்தாண்டம் மகளிர் போலீசார், சந்தியாவையும் அசோகனின் பெற்றோரையும் அழைத்து விசாரித்தனர். அசோகனுடன் சேர்ந்து வாழ்வதில் சந்தியா உறுதியாக இருந்தார். மகனை மறுநாள் ஆஜர்படுத்துவதாக கூறிவிட்டு சென்ற பெற்றோர், பின்னர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, போலீசார் சந்தியாவின் முதல் கணவர் செல்வத்துக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று மார்த்தாண்டம் வந்த செல்வத்துடன் சந்தியாவை சந்திக்க வைத்தனர். இருவரும் சிறிது நேரம் தனியாக மனம் விட்டு பேசினர். பின்னர் கணவருடனே செல்வதாக சந்தியா கூறினார். இதையடுத்து அவரை செல்வத்துடன் போலீசார் அனுப்பிவைத்தனர்.



Source :Dinakaran

லஞ்சப்புகாரில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் வீடியோவில் பதிவான பரபரப்பு காட்சிகள்

லஞ்சப்புகாரில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் வீடியோவில் பதிவான பரபரப்பு காட்சிகள்



திருப்பூரில், போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் இந்திராணி, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றது வீடியோ பதிவு காட்சிகளில் அம்பலமாகியுள்ளது; அதில், இன்ஸ்பெக்டர் இந்திராணி, பணம் பெற்றதை அவராகவே ஒப்புக்கொண்டு வாக்குமூலம் தருவது காட்சிகளில் பதிவாகியுள்ளது.


உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி; திருப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக கூடுதல் பொறுப்பு வகித்தார். கடந்த 23ம் தேதி மதியம், கரட்டாங்காடு பஸ் ஸ்டாப்பில் உள்ள எலக்ட்ரிக்கல் கடைக்குச் சென்ற அவர், அக்கடை உரிமையாளர் சரவணனிடம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.அதை "வீடியோ'வில் பதிவு செய்ததாக "வீடியோ' சுப்ரமணியம் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


இவ்வழக்கு தொடர்பான விசாரணையில், "இன்ஸ்பெக்டர் இந்திராணி லஞ்சம் பெறவில்லை எனவும், மொபைல் போன் பழுதை சரிபார்க்கவே எலக்ட்ரிக்கல் கடைக்கு சென்றதாகவும்,' திருப்பூர் டி.எஸ்.பி., ராஜா கூறினார். இருப்பினும், இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கினாரா என்பதை விசாரிக்க, ஏ.டி.எஸ்.பி., பாஸ்கரன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கூடுதல் பொறுப்பில் இருந்து இந்திராணி விடுவிக்கப்பட்டு, உடுமலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.


இந்நிலையில், பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் ஊடகங்களுக்கு "வீடியோ' சுப்ரமணியம், இன்ஸ்பெக்டர் இந்திராணி லஞ்சம் பெற்றபோது எடுத்த வீடியோ காட்சிகள் அடங்கிய "சிடி' நேற்று கிடைத்தது. அதில், "வீடியோ' சுப்ரமணியத்தின் குரலும், இன்ஸ்பெக்டர் பேசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. மொத்தம் மூன்று பைல்கள் இருந்தன. முதல் பைலில் 26 வினாடிகள் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இன்ஸ்பெக்டர் இந்திராணி எலக்டரிக்கல் கடைக்குள் நின்று கொண்டு பேசுகிறார்.


அதன் விவரம்:
ஆண் குரல் (சுப்ரமணியம்): கவர் போட்டு எதுக்காக, நீங்க பணம் வாங்குனீங்க? இந்த பணம் யார், யாருக்கெல்லாம் போகுது?
இந்திராணி: இல்லீங்க, அதுவந்து...
ஆண் குரல்: உண்மையைச் சொன்னா விட்டுருவேன். உண்மையைச் சொல்லுங்க. மன்னிப்பு வேற கேட்டுருக்கீங்க. உண்மையை சொல்லுங்க.
இந்திராணி: யாருக்கும் தரலைங்க; டிரைவருக்கு தரத் தான் பணம் வாங்கினேன். வேண்டாம். தயவு செய்து இதை எடுக்காதீங்க. என்னை விட்டுருங்க. (அழுகிறார்)
ஆண் குரல்: காலை தொட்டு கும்பிட்டு கேட்கறீங்க. லேடீசா வேற இருக்கீங்க? எதுக்காக, லஞ்சம் வாங்கனீங்க?
(இத்துடன் முதல் காட்சி முடிகிறது)


இரண்டாவது பைலில் 48 வினாடிகள் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஆண் குரல்: பிரபாவதி வழக்கில் இவரை (சரவணனை) என்னவா போட்டிருக்கீங்க?
இந்திராணி: சாட்சியா போட்டிருக்கோம்.
ஆண் குரல்: அதாவது, சாட்சியமா போட்டிருக்கீங்க. இவர் சம்பவத்தை நேரில் பார்த்தாரா? இவரை எதுக்காக சாட்சியமா போட்டீங்க?
இந்திராணி: இவரை எனக்கு தெரியாதுங்க. எஸ்.ஐ., ரமா மூலமா தான் இவரை வழக்குல சேர்த்தோம். இவரை நான் முன்ன பின்ன பார்த்தது இல்லை.
ஆண் குரல்: பிரபாவதி வழக்குல இவரு சாட்சியா வந்து என்ன சொல்லணும்?
(இத்துடன் இரண்டாவது பைலில் இருந்த காட்சிகள் முடிகின்றன)


மூன்றாவது பைலில் மொத்தம் 3.16 வினாடிகள் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் "வீடியோ' சுப்ரமணியம், போனில் பேசுகிறார்.
"வணக்கம் சார். நான் "வீடியோ' சுப்ரமணியம் பேசுறேன்.
எதிர்முனையில் சவுத் போலீஸ் ஸ்டேஷன் சார் என குரல் கேட்கிறது.
ஆண் குரல்: பெரிச்சிபாளையம் பஸ் ஸ்டாப் பக்கத்துல இருந்து பேசறேன். இங்க, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேடம் இந்திராணி, ஒருத்தரை மிரட்டி, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கவர்ல வாங்கி, பாக்கெட்டுல வைச்சிட்டாங்க. விசாரணைக்கு அழைக்க மாட்டேன்னு சொல்லி, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியிருக்காங்க. அதை நான் வீடியோ எடுத்திருக்கேன். ஒரு மணி நேரமாச்சு. இதை உயரதிகாரிகள் கிட்ட சொல்லுங்கன்னா, சொல்ல மாட்டேன்னு சொல்லி அழறாங்க. காலை தொட்டு தொட்டு கும்பிடறாங்க... என பேசுகிறார்.
இதற்கு, போலீசார் வர்றாங்க என போனில் பேசுபவர் சொல்ல... யாரும் வரலை. பஸ் ஸ்டாப் பக்கத்துல வர சொல்லுங்க, என சொல்லும்போது, 407 வண்டி வருது என, அக்குரலே சொல்கிறது.ரோட்டில் நிற்கும் வேனில் இருந்து போலீசார் சிலர் இறங்கி வருகின்றனர். கடைக்குள் செல்கின்றனர். அங்கிருந்த இந்திராணியை, நீங்க வண்டிக்கு போங்க மேடம் என ஒரு போலீஸ்காரர் சொல்கிறார். அப்போது, "வீடியோ' சுப்ரமணியத்திடம் இருந்து மொபைல் போன் பறிக்கப்படுவது போலவும், அவரை போலீசார் பிடித்துக் கொள்வது போலவும் காட்சிகள் எதுவுமின்றி, "வீடியோ' சுப்ரமணியம் குரல் மட்டுமே ஒலிக்கிறது.இதில், "எல்லாம் தர்றேன். போலாம், எங்க வேணாலும் வர்றேன். எந்த வண்டியில் ஏறணும்? என்ன வேணா நீங்க பண்ணலாம். ஆனா, கடவுள்னு ஒருத்தர் இருக்கார். எல்லாத்தையும் வீடியோ எடுத்திருக்கேன். லஞ்சம் வாங்கிய அதிகாரியை "வீடியோ' எடுத்த நான் குற்றவாளியா? நல்லா கேட்டுக்குங்க எல்லாரும்' என, ஒலிக்கிறது. அதன்பின், சைரன் ஒலியுடன் வீடியோ காட்சி நிறைவடைகிறது. இதில், கடைக்குள் எடுக்கப்பட்ட காட்சிகளும், ரோட்டில் போலீசார் வரும் காட்சிகளும், கடைவீதியில், ரோட்டில் உள்ள சத்தங்களும் இக்காட்சியில் தெளிவாக உள்ளது. காட்சிகளும், கடை வீதியில், ரோட்டில் உள்ள சத்தங்களும் இந்த வீடியோ பதிவில் தெளிவாக கேட்கிறது.



எஸ்.பி., அருண், நிருபர்களிடம் கூறியதாவது: இன்ஸ்பெக்டர் இந்திராணி லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வீடியோக்களை நானும் பார்த்தேன். அதில், சில காட்சிகளும், சிலரது பேச்சும் பதிவாகி உள்ளது. இதை, தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இன்ஸ்பெக்டர் இந்திராணி மீதான லஞ்சப்புகார் குறித்து விசாரிக்க ஏ.டி.எஸ்.பி., பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் லஞ்சம் வாங்கியது உண்மை என விசாரணையில் தெரியவந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில், அவரது செயலை நியாயப்படுத்த முடியாது. அதேநேரத்தில் தவறு செய்தவர்களை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் வாங்குவதும் தவறுஇந்திராணி பணம் பெற்றதாக கூறப்படும் காட்சிகள், ஆடியோ (ஒலிப்பதிவு)வாக மட்டுமே உள்ளன. ஒலிக்கும் குரல் இந்திராணியின் குரல் என உறுதியாக கூற முடியாது.


ஆடியோ "மிக்சிங்' முறையில் ஒருவரது குரலில் வேறு ஒருவர் பேசும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. அந்த வீடியோவில் இந்திராணிக்கு பணம் கொடுப்பது போலவும், அவர் பணத்தை பெற்றுக் கொள்வது போலவும் எந்த காட்சியும் இல்லை. ஒலிக்கும் குரல்களும், உண்மையாக நடந்த சம்பவங்களின் போது பேசப்பட்டவையா என விசாரணையின் முடிவில் தெரியவரும். உண்மை தெரியவரும் போது, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எஸ்.பி., தெரிவித்தார்.


Tuesday, July 20, 2010

கள்ளக்காதலியின் வெறிச்செயல் அம்பலம்

சென்னையில் காணாமல் போய், சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் ஆதித்யாவை, அவனது தந்தையின் கள்ளக்காதலி பூவரசியே கொன்று சூட்கேசில் எடுத்துச் சென்று நாகப்பட்டினத்தில் வீசியுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பூவரசியை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, விருகம்பாக்கம் பத்மாவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (33). கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர், சென்னையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி (எ) அனந்த லட்சுமி (30). இவர்களுக்கு நிவேதா (6) என்ற மகளும், மூன்றரை வயதில் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த திருவலம் கிராமத்தை சேர்ந்தவர் பூவரசி (26). எம்.எஸ்சி., பட்டதாரியான இவர், ஜெயக்குமார் பணியாற்றும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஜெயக்குமாரும், பூவரசியும் முன்னரே, சென்னையில் வேறு ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய போது நெருக்கம் ஏற்பட்டு, கள்ளத் தொடர்பாக வளர்ந்தது. பூவரசியை, வேப்பேரியில் உள்ள ஒய்.டபிள்யூ.சி.ஏ., விடுதியில் ஜெயக்குமார் தங்க வைத்தார். இதை அறியாத ஆனந்தியும், அவரது குழந்தைகளும், பூவரசியிடம் நெருக்கமாக பழகினர்.

ஜெயக்குமார் அடிக்கடி தனது மகன் ஆதித்யாவை அலுவலகத்திற்கு அழைத்து வரும் போது, பூவரசி தன்னுடன் அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த சனிக்கிழமை 17ம் தேதி வழக்கம் போல் ஆதித்யா, அலுவலகம் வந்த போது, அரண்மனைக்காரன் தெருவில் உள்ள ஆண்டர்சன் சர்ச்சில் விழா நடப்பதாகவும், அங்கு ஆதித்யாவை அழைத்துச் செல்வதாகவும் பூவரசி கூறினார். தொடர்ந்து, ஜெயக்குமார், ஆதித்யாவை பூவரசியுடன் அனுப்பி வைத்தார். அன்று மாலை 6 மணிக்கு தனது மகன் ஆதித்யாவை காணவில்லை என்று எஸ்பிளனேடு போலீசில் ஜெயக்குமார் புகார் அளித்தார். விசாரணையில், தனது மகனை, நண்பியான பூவரசியுடன் அனுப்பியதாகவும், அவர் சர்ச்சில் மயங்கி விழுந்த போது மகனை காணவில்லை என்றும் கூறியிருந்தார்.


தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்த பூவரசியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரும் அப்படியே கூறியதால், மறுநாள் விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறியிருந்தனர். மறுநாள் காலை போலீசும், ஜெயக்குமாரும் தொடர்பு கொண்ட போது, பூவரசியின் மொபைல் "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் இணைப்பு கிடைத்த நிலையில், போலீசார் மீண்டும் பூவரசியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நாகை மாவட்ட புதிய பஸ் நிலையத்தில் சூட்கேசில் இறந்த நிலையில் சிறுவன் பிணம் மீட்கப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த படத்தை வைத்து கேட்ட போது ஜெயக்குமாரும், பூவரசியும் மறுத்துவிட்டனர். ஆனால், ஆனந்திக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர் அடையாளம் காட்ட நாகைக்கு அனுப்பப்பட்டார்.அங்கு சென்ற ஆனந்தி, சூட்கேசில் இருந்த சிறுவன் உடல் தனது மகன் ஆதித்யாவுடையது தான் என தெரிவித்தார். தொடர்ந்து, பூவரசியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், ஆதித்யாவை கொன்றதை ஒப்புக் கொண்டார். போலீசார், பூவரசியை கைது செய்தனர். சிறுவனின் தந்தை ஜெயக்குமார் தற்போது நாகை விரைந்துள்ளார்.


கண்காணிப்பு கேமரா வேஸ்ட்? :சிறுவன் உடல், நாகை அரசு மருத்துவமனையில் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.இது குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்ததையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை போலீசாருடன், நாகை அரசு மருத்துவமனைக்கு வந்த ஆனந்தி, சிறுவன் உடலை பார்த்து கதறியழுது மயங்கி விழுந்தார். மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் ஆனந்தி சேர்க்கப்பட்டார்.நேற்று மாலை சிறுவன் ஆதித்யா உடல், பிரேத பரிசோதனைக்கு பின், நாகை சுடுகாட்டில் போலீஸ் பாதுகாப்புடன் புதைக்கப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் சோகத்தோடு பங்கேற்றனர்.நாகை பஸ் ஸ்டாண்டு முழுப்பகுதியையும் கண்காணிக்க, நவீன கேமரா பொருத்தப்பட்டு இதன் கட்டுப்பாட்டு அறை டி.எஸ்.பி., அலுவலகத்தில் 24 மணி நேரமும், தனி அலுவலரால் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டின் மையப்பகுதியில், சிறுவனை கொலை செய்து உடலை அடைத்து வைத்திருந்த சூட்கேஸ் இறக்கி வைக்கப்பட்டு, அனாதையாக கிடந்துள்ளது. இது நவீன கண்காணிப்பு கேமராவில் பதிவாகாத மர்மம் போலீசாருக்கு புரியாத புதிராக உள்ளது.


தொடரும் சூட்கேஸ் கொலைகள்: கொலை செய்து சூட்கேசில் பிணத்தை வைத்து அதை வெளியிடத்திற்கு கொண்டு சென்று போடுவது தற்போது தொடர்கதையாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசுவை, சீனியர் மாணவர் ஜான் டேவிட் கொலை செய்து, சூட்கேசில் வைத்து வெளியில் கொண்டு சென்று போட்டார். அதே போன்று, பெங்களூரு ரயிலில் ஒருவர் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் வைக்கப்பட்டிருந்தார். இவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை.அதே போன்று, போரூர் மருத்துவக் கல்லூரி மாணவர், தனது அத்தையை கொன்று சூட்கேசில் வைத்து எடுத்து வந்து மைதானத்தில் வைத்து எரித்துள்ளார். பூக்கடை பஸ் நிலையத்தில் ஒரு பெண்ணை கொன்று சூட்கேசில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாணியில், தற்போது இந்த சிறுவனையும் பூவரசி கொலை செய்து சூட்கேசில் வைத்து கடத்தியுள்ளார்.கொலை செய்து சூட்கேசில் வைத்து எடுத்துச் செல்லும் போது யாரும் அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்து விட முடியாது என்பதால் கொலையாளிகளின் இந்தச் செயல் தொடர்கதையாகி வருகிறது.


"ஜெயக்குமாரை பழிவாங்கவே கொன்றேன்' : போலீசார் விசாரணையில் பூவரசி தெரிவித்திருப்பதாவது:ஜெயக்குமாருக்கும், எனக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். நான் கர்ப்பமடைந்த நிலையில், ஜெயக்குமாரின் வற்புறுத்தலால் கருவை கலைத்தேன். இரண்டு முறை அப்படி நடந்தது. தொடர்ந்து அவர், கருவை கலைக்கச் சொன்னதால் நான் ஆத்திரமடைந்தேன். திருமணம் செய்யுமாறு கூறியபோது ஜெயக்குமார் மறுத்தார். எனக்கு உருவான குழந்தையை கொன்றுவிட்டு, ஜெயக்குமார் மட்டும் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்று எண்ணினேன்.


கடந்த 17ம் தேதி, சிறுவன் ஆதித்யாவை கூட்டிக் கொண்டு எனது விடுதிக்குச் சென்று, அங்கு அவன் அணிந்திருந்த டிரஸ்சில் இருந்து நைலான் கயிறை எடுத்து கழுத்தில் இறுக்கி கொன்றேன். பின்பு, தலையை பிளாஸ்டிக் கவரை கொண்டு மூடி உடலை சூட்கேசில் வைத்தேன். அங்கிருந்து ஆண்டர்சன் சர்ச்சிற்கு பாவமன்னிப்பு கேட்கச் சென்ற போது மயங்கி விழுந்து விட்டேன். போலீசார், மருத்துவமனையில் வைத்து விசாரிக்கும் போது, ஆதித்யாவின் உடல் சூட்கேசில் எனது அறையில் இருந்தது.மறுநாள் காலை மருத்துவமனையில் இருந்து வந்து, ஆட்டோவில் சூட்கேசை ஏற்றி கோயம்பேடு சென்று, அங்கிருந்து பஸ்சில் ஏற்றி புதுச்சேரி சென்றேன். அங்கு, நாகை பஸ்சில் சூட்கேசை ஏற்றி வைத்து விட்டு, மீண்டும் சென்னை திரும்பி விட்டேன். ஜெயக்குமாரை பழிவாங்கவே நான் இந்த கொலையை செய்தேன்.



Sunday, July 18, 2010

How a fiancée killed Intel employee





A murder most foul and crimes that rocked cities acrosss India and Australia

Crime file opens with a murder of Bangalore-based Intel engineer that was cleverly planned by his fiancee. The file also has the terrible case of how an Indian was punched hard and left to bleed by drunken youths in Australia. Read on.

Cell phone message cracked Intel man's murder

Bangalore: When Girish, an engineer with Intel, got engaged to Shubha seven years ago, he was on cloud nine. After a colourful and traditional engagement to his neighbour of 15 years in Bangalore, he began a long courtship. One evening, a happy Girish took out Shubha for a lavish dinner not knowing that it was his last supper. Soon after the dinner, a chirpy Shubha wanted to see planes take off and land at the old HAL airport. The planes used to come low over the ring road before touching down on the runway.

Girish took his would-be to the spot where the planes could be almost at 'touching' height. On seeing a few planes, Shubha was excited and Girish had his eyes glued on the girl who would have been his wife in a few days. Then came a thud -- something hit Girish so hard that he fell unconscious and bleeding.


A 'terrified' Shubha yelled, screamed and went into an orchestrated hysteria. Girish was shifted to hospital by passers-by where he breathed his last.

A 'depressed and shaken-up' Shubha filed a police complaint stating that unknown assailant had hit Girish on the head and fled.

The murder that took place on the night of December 3, 2003 near Air View, Domlur-Kormangala Ring Road hit the headlines with various theories. But the police smelt something fishy. Why did the assailants not touch Shubha though she was wearing ornaments? Why was Girish's wallet not taken? What then was the motive?


The first thing that the investigation team did was to call for the cell phone records of Shubha and Girish.

What surprised the police was that Shubha had made a call soon after the dinner and before the murder to one number. The conversation lasted just a few minutes. Days after the crime, Shubha had exchanged SMSes and had conversed at length. Armed with this number, the police found out that the receiver of the call was Arun Verma, a classmate of Shubha.

The police soon confronted Arun and wanted to find out what that small talk was all about. A terrified Arun soon came out with the truth.

Giving details of the plot, Special Public Prosecutor Venkat Rao said: "Arun Verma, the main accused, and Shubha were students of the same law college. He approached Dinesh, one of his relatives, who in turn took the help of another friend Venkatesh. There is ample evidence to prove that Shubha was behind the murder and is booked for conspiracy and killing."

This was the first time that cellphone records were used to crack a case.

Investigators said Shubha, then a student of BMS College of Law, had been in love with Verma, her junior in college and two years younger to her. Her parents, who got to know of the affair, forced her into engagement with Girish, their neighbour for 15 years.

Following the engagement, Shubha and Verma conspired to eliminate Girish. Dinakar helped his cousin to plot the murder, and even hired Venkatesh. They carried out their plan three days after Girish was engaged to Shubha.

Girish was a brilliant student. His death shook his father who died of shock and depression 2007.

Based on the investigations, the police arrested Shubha, her lover Arun Verma and his cousin Dinakar alias Dinesh. The fourth convict, tempo driver Venkatesh, has been languishing in jail since 2004.

According to the prosecution, Girish had parked his two-wheeler on the road, and the couple went to watch aircraft landing. Meanwhile, Verma and Venkatesh were watching the couple from the other side of the road. As Girish was watching the landings, Venkatesh sneaked in from behind, and hit him on the head with a shock observer. He then fled on Verma's bike.

The 17th Fast Track court in Bangalore on Wednesday sentenced Shubha, her boyfriend Arun Verma and two of his associates to life imprisonment. A fine of Rs 50,000 each was also levied on the four accused and the amount will be handed over to Girish's family.

Shubha was given two years extra jail term and Rs 20,000 fine for trying to destroy evidence.

When Shubha came to the court, she looked unmoved and had a deadpan expression. Arun and Dinesh covered their faces and tried to flee from the media.

Friday, July 16, 2010

குழந்தைகளை அடித்தால் 3 ஆண்டு சிறை


குழந்தைகளை அடிக்கும் பெற்றோரை தண்டிக்க புதுச்சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


குழந்தைகளை அடிக்கும் பெற்றோரை தண்டிக்க அமெரிக்காவில் சட்டம் உள்ளது. அதுபோன்ற சட்டம் நம்நாட்டிலும் கொண்டு வரப்படவுள்ளது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் குழந்தைகள் தாக்கப்படும் சம்பவம் நம்நாட்டில் அதிகம் நடக்கிறது. இதை தடுக்க குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய கமிஷன்(என்சிபிசிஆர்) சில விதிமுறைகளை வகுத்துள்ளது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் கடந்த ஆண்டு உருவாக்கிய குழந்தைகளுக்கு எதிரான தாக்குதல் தடுப்பு மசோதாவும் அமைச்சரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.


இச்சட்டத்தின் மூலம் குழந்தைகளை அடிக்கும் பெற்றோர், ஆசிரியர், உறவினர் மற்றும் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். குழந்தைகளை முதல் தடவை அடித்தால் ஒரு ஆண்டு ஜெயில் அல்லது ரூ.5000 அபராதம், இரண்டாவது முறையாக அடித்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை பிச்சை எடுக்க விடுபவர்கள், வேலைக்கு வைத்திருப்பவர்கள், கடத்துபவர்கள் மீதும் இந்த சட்டம் பாயும். இந்த சட்ட மசோதா, பார்லிமென்ட்டில் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.



Friday, July 9, 2010

Lady sanyasi weds 20 years old boy





The Child Marriage Restraint Act, that is. While woman asks police to take action against former swamini, who married her underage son, the police say the law is silent on how to proceed


The police are clueless about how to respond to the complaint lodged by Ratnamma, whose son Chetan, has, at the age of 20, married 32-year-old Nivedita, a sanyasin, who gave up her robes for love.


Following the wedding on Monday, Ratnamma lodged a complaint against Nivedita with the Chitradurga police under the Child Marriage Restraint Act 1929.


Police officers at the station say that while the Act does prescribe punitive action against a man who marries a female minor, it is silent on the situation where a senior woman a male below the permissible age for marriage.


Ratnamma is pressing for action against Nivedita and the media has also turned its glare on the developments in the case.


"I am not sure what exactly we can do," admits Labhu Ram, superintendent of police, Chitradurga. "Ratnamma has given us documents to prove her son is a minor.


We are, however, yet to obtain the marriage certificate. For the time being, I can tell you the investigation is on."


Ratnamma had earlier lodged a case of kidnapping against Nivedita. She accused Nivedita of abducting Chetan, who later clarified that he was with Nivedita by choice.


"After we recorded Chetan's statement, Ratnamma lodged a fresh complaint that alleges that her son is below the permissible age for marriage. We are deliberating on what steps we can take," said Labhu Ram.


Ratnamma is reportedly in a big hurry to get the marriage annuled, as Chetan becomes 21 in another eight months, after which, he is allowed by law to marry the woman he pleases.


Chetan's driving licence and transfer certificate is in possession of media and confirmed that he is less than 21-years-old. The certificate mentions his age as February 1, 1990.


"I am ready to move the High Court, if the police fail to act on my complaint," said Ratnamma.


"But, my concern is that we don't have much time on our hands. I want to liberate my son from this vicious trap before the law allows his marriage with Nivedita."


She added that she was contemplating taking the police to court. She felt the police had failed to discharge their duty and was negligent in the matter. However, the police say Ratnamma is unlikely to achieve much.


"There are no stringent laws to punish the accused in such cases," said H S Chandramouli, the state public prosecutor. "Since the boy will turn 21 within a year, it should not be a serious case," he added.


http://timesofindia.hotklix.com/Hotklix/link/News/India/Lady-sanyasi-32-marries-boy-of-20-yrs-cops-in-a-fix

Friday, July 2, 2010

திருமணத்தை தர்ணா செய்து நிறுத்திய பெண் போலீஸ்


Version No. 1

சென்னை வேப்பேரி மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றுபவர் செந்தில்குமாரி (36). கடந்த 2005ம் ஆண்டு கணவர் முருகானந்தத்திடம் இருந்து விவாகரத்து பெற்ற செந்தில்குமாரி, அதன்பிறகு சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் மகன் விக்னேஸ்வரனுடன் (10) வசித்து வருகிறார்.

கடந்த 2007ம் ஆண்டு வேலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் எம்.கோபால கிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. விடுமுறையில் வரும் போதெல்லாம் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்றிருக்கிறார்கள். கடந்த 24ம் தேதி திருப்பதியில், நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் செந்தில்குமாரியை கோபால கிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது




பெண் போலீசை மணந்து கொண்ட ராணுவ வீரர், அவருக்கு தெரியாமல் மீண்டும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயன்ற போது, முதல் மனைவி தர்ணா செய்து திருமணத்தை தடுத்து நிறுத்தினார். ராணுவ வீரர் தப்பியோடி, தலைமறைவாகி விட்டார்.



வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்த அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (40). இவர், டில்லியில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மாங்காட் டைச் சேர்ந்த சத்யா (26) என்பவருக்கும், திருமணம் செய்ய கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. மூன்று லட்சம் ரூபாய் வரதட்சணையாக கோபால கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இவர்கள் திருமணம், திருவலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடக்க இருந்தது. திருமணத்துக்கு இரு வீட்டார் சார்பில், நூற்றுக்கணக்கான உறவினர்கள் வந்திருந்தனர். சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரியும் செந்தில்குமாரி (34) என்பவர், "எனக்கும், கோபாலகிருஷ்ணனுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது. தற்போது என்னை விட்டு, விட்டு வேறு பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட இருப்பதால், இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்' என, சிப்காட் மகளிர் போலீசாரிடம் நேற்று காலை 8 மணிக்கும், திருவலம் போலீசாரிடம் காலை 9 மணிக்கும் புகார் செய்தார். செந்தில்குமாரி கொடுத்த புகாரை வாங்க போலீசார் மறுத்தனர். தானும் ஒரு போலீஸ் தான் என்று கூறியதையும் ஏற்கவில்லை.



அதிர்ச்சியடைந்த செந்தில்குமாரி, திருமணத்தை தடுக்க நேரடியாக களம் இறங்கினார். ராணிப்பேட்டை, வாலாஜா பேட்டையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு தகவல் கொடுத்தார். திருமண மண்டபத்தின் முன் உட்கார்ந்து தர்ணா போராட்டம் செய்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மாப்பிள்ளை வீட்டார் தர்ணா செய்த செந்தில்குமாரியை தாக்கினர். செந்தில்குமாரி தர்ணா செய்யும் விவரம் அறிந்த கோபாலகிருஷ்ணன் மணமேடையில் இருந்து அவசர, அவசரமாக சத்யாவுக்கு தாலி கட்ட முயன்றார். செந்தில்குமாரி தர்ணா செய்தது குறித்து தகவல் அறிந்த மணப்பெண் சத்யா, மேடையை விட்டு இறங்கி வந்து விசாரித்த போது, கோபாலகிருஷ்ணனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்ட விவரம் தெரிந்தது. ஆத்திரமடைந்த சத்யா மண மேடையை விட்டு வெளியேறினார். சத்யாவின் உறவினர்கள், பெற்றோர் தாங்கள் கொடுத்த சீர் வரிசைப் பொருட்களை ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டு பெண் வீட்டாரும், அவர்களது உறவினர்களுடன் வெளியேறினர். இதனால் திருமணம் நின்றது.



இந்த நேரத்தில் கோபாலகிருஷ்ணன் தர்ணா செய்த செந்தில்குமாரியை தாக்கி விட்டு தப்பியோடினார். தகவல் அறிந்த சிப்காட் போலீசார், தர்ணா செய்த செந்தில்குமாரியை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றினர். தன் தங்கைக்கு திருமணம் நின்று போன வருத்தத்தில் சத்யாவின் அண்ணன் ராமமூர்த்தி (45) அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு, தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது, அவர்களது உறவினர்கள் காப்பாற்றினர்.



இது குறித்து பெண் காவலர் செந்தில்குமாரி கூறியது: பெண் போலீசான என்னைப் பார்த்து பயப்படாமல் காதலிப்பதாக சொன்ன கோபால கிருஷ்ணன் தைரியத்தை பார்த்து, 2007 முதல் அவரை காதலித்தேன். அவருடன் பல இடங்களுக்கு சென்று வந்தேன். கடந்த ஜூன் 20ம் தேதி திருப்பதியில் எங்கள் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு வரதட்சணையாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்னிடம் வாங்கிக் கொண்டார். இப்போது வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருந்த தகவல் கிடைத்ததும் சிப்காட், திருவலம் போலீசில் புகார் கொடுத்த போது, போலீசான நான் கொடுத்த புகாரையே வாங்க மறுத்து விட்டனர். எனக்கே இந்த கதி என்றால், பொது மக்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். திருவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய கோபால கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.